நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டமன்ற இடைத் தேர்தலில் பிரதமர் ஆதரவை கோரியது மஇகாவின் சக்தியை மீண்டும் நிரூபித்துள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்

கோல குபு பாரு:

சட்டமன்ற இடைத் தேர்தலில் பிரதமர் ஆதரவை கோரியது மஇகாவின் சக்தியை மீண்டும் நிரூபித்துள்ளது.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு மஇகா ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலுக்கு பின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் மஇகா வாக்குறுதியை வழங்கியது.

இதன் அடிப்படையில் தான் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒற்றுமை அரசாங்கத்திற்கும் அதன் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தார் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

கடந்த முறை நடைபெற்ற ஆறு மாநில சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து தற்போது கோல குபு பாரு இடைத்தேர்தலில் ஆதரவு வழங்குமாறு பிரதமர் மஇகாவை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் மூலம் மஇகாவின் சக்தியும் வாக்காளர்களை ஈர்க்கும் ஆற்றலும் மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset