செய்திகள் மலேசியா
சட்டமன்ற இடைத் தேர்தலில் பிரதமர் ஆதரவை கோரியது மஇகாவின் சக்தியை மீண்டும் நிரூபித்துள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்
கோல குபு பாரு:
சட்டமன்ற இடைத் தேர்தலில் பிரதமர் ஆதரவை கோரியது மஇகாவின் சக்தியை மீண்டும் நிரூபித்துள்ளது.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு மஇகா ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தலுக்கு பின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் மஇகா வாக்குறுதியை வழங்கியது.
இதன் அடிப்படையில் தான் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒற்றுமை அரசாங்கத்திற்கும் அதன் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தார் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
கடந்த முறை நடைபெற்ற ஆறு மாநில சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து தற்போது கோல குபு பாரு இடைத்தேர்தலில் ஆதரவு வழங்குமாறு பிரதமர் மஇகாவை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன் மூலம் மஇகாவின் சக்தியும் வாக்காளர்களை ஈர்க்கும் ஆற்றலும் மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm