நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்

உலு சிலாங்கூர்:

நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணமடைந்த சம்பவம் பத்தாங்காலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்தாங்காலி ஜாலான் கெந்திங் லாமாவில் உள்ள ஆற்றில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர் என்று சிலாங்கூர் தீயணைப்புப் படையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் கூறினார்.

இந்த சம்பவத்தில் 43 வயது தந்தையும் 9 வயது பெண் பிள்ளையும் 6 வயது ஆண் பிள்ளையும் மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்கள் பத்தாங்காலி கம்போங் குவாந்தானில் இருந்து அங்கு குளிக்க சென்றுள்ளனர்.

மரணமடைந்தவர்களின் உடல் கோல குபு பாரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset