நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக்கை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

நஜீப் நண்பர்கள் கிளப்பின் இரண்டாவது ஆண்டுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இகூட்டத்திற்கு தலைமையேற்று பேசிய ஜாஹித்,

நஜிப்பை விடுவிக்கும் முயற்சியில் பல தடைகள் இருந்தாலும் மற்றொரு பாதைகளும் திறந்துள்ளது.

நான் செய்வது அனைவருக்கும் தெரியும். நான் என்ன செய்கிறேன் என்பது பலருக்குத் தெரியாது.

ஆனால் நான் என்ன செய்கிறேன் என்று ரோஸ்மாவுக்குத் தெரியும்.

இங்கு நிருபர்கள் அதிகம் இருப்பதால் என்னால் முழுமையாக சொல்ல முடியாது என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset