செய்திகள் மலேசியா
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
கோலாலம்பூர்:
கோல குபு பாரு தேர்தலில் போது பிரதமருக்கு எதிராக சமூக மக்களை ஒரு சில தலைவர்கள் தூண்டி விடுகின்றனர்.
இது எனக்கு ஏமாற்றமளிக்கிறது என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் கூறினார்.
சில தரப்பினர் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு மிகவும் ஆசைப்படுகிறார்கள்.
இதற்காக அவர்கள் வெறுப்பு அரசியலையும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தையும் கையில் எடுத்துள்ளனர்.
கோல குபு பாரு இடைத்தேர்தல் பிரச்சாரக் காலத்தில் சமூகத்தைத் தூண்டிவிட சில இந்தியத் தலைவர்கள் இத்தகைய தந்திரங்களைக் கையாண்டதால் தான் மிகவும் ஏமாற்றமடைந்ததாக அவர் கூறினார்.
நான் முன்பே சொன்னேன். மீண்டும் சொல்கிறேன்.
சம்பந்தப்பட்ட சில இந்தியத் தலைவர்கள் தஞ்சோங் ரம்புத்தானுக்கு சென்று தங்களைப் பரிசோதிக்க வேண்டும்.
அவ்வளவு நல்லவராக இருந்தால் ஏன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடவில்லை?
புத்ராஜெயாவில் ஜோம் ஹோபோ கார்னிவல் நிகழ்வுக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக டத்தோஶ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசு பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
இதை யாராலும் மறுக்க முடியாது என்று டத்தோ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm
இந்திய சமூக திட்டங்களை கண்காணிக்க சிறப்பு குழு தேவையில்லை: டத்தோ ரமணன்
May 18, 2024, 1:57 pm
ஜொகூரில் ஜெமா இஸ்லாமியா அமைப்பில் 20 உறுப்பினர்கள்: ரஸாருடின் தகவல்
May 18, 2024, 1:34 pm