நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 10 பேரின் பிரேதப் பரிசோதனைகள் நிறைவடைந்தன: அ.சிவநேசன்

ஈப்போ: 

லுமுட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த 10 மலேசியக் கடற்படை உறுப்பினர்களின் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை தடயவியல் பிரிவில் பிரேதப் பரிசோதனை செயல்முறை கிட்டத்தட்ட நிறைவடைந்தன என்று பேராக் மாநில மனிதவளம், சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாடு குழுவின் தலைவர் அ.சிவநேசன் கூறினார். 

இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவ அதிகாரிகளும் நேற்று மதியம் முதல் கடுமையாக உழைத்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும், மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளும் பிரேதப் பரிசோதனை செயல்முறையைத் தொடங்க உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார். 

முன்னதாக, மருத்துவமனையில் தயார் செய்யப்பட்ட சிறப்பு அறையில் திரண்டிருந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை அவர் பார்வையிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset