நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது

கோத்தா பாரு: 

ஊழலில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் அரசு நிறுவனத்தின் மேலாளர் மற்றும் இரண்டு மூத்த அதிகாரிகள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

40, 47 மற்றும் 49 வயதுடைய மூத்த அதிகாரிகள் மாநில எம்ஏசிசி அலுவலகத்தில் நேற்று இரவு 7.15 மணி முதல் 8 மணி வரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி வட்டாரம் தெரிவித்துள்ளது.

லஞ்சம் கேட்பது மற்றும் பெறுவது குறித்து எம்ஏசிசி மேற்கொண்டு விசாரணை நடத்த அனுமதிக்கும் வகையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டதை உறுதி செய்த கிளந்தான் எம்ஏசிசியின் பணிப்பாளர் ரோஸ்லி ஹுசைன், சந்தேகநபர்கள் மூவரும் நாளை காலை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்று கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset