நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி கொள்கையின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: பிரதமர்

புத்ராஜெயா:

மடானி கொள்கையின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது அரசு ஊழியர்களுக்கான ஒரு மரியாதை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டின் பொருளாதார நிலை இன்னும் சீராக இல்லாததால் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் துணிச்சலான முடிவை எடுத்துள்ளது.

மிகப் பெரிய கூட்டு அரசாங்கத்தின் பிரதமர் என்ற முறையில் தேசியக் கடன் தொகை, முறைகேடுகள் போன்ற விவகாரங்களால் அரசு ஊழியர்களை இனி தண்டிக்க முடியாது.

நாட்டின் பொருளாதாரம் நிலைப் பெறும் வரை சம்பள உயர்வை ஒத்துவைக்க வேன்டும் என்பது தான் சிறந்த வழிமுறையாகும்.

ஆனால் மடானி கொள்கையின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

அவர்களின் சுமையை மேலும் அதிகரிக்கக் கூடாது.

இதன் அடிப்படையில் தான் அரசு இந்த முடிவை எடுத்தது என்று பிரதமர் துறையின் மாதாந்திர சந்திப்பில் உரையாற்றிய பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset