நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூனைக் குட்டியை எரியூட்டிய மூவர் தேடப்படுகிறார்கள்: காவல்துறை

காஜாங்:

பூனைக் குட்டியை எரியூட்டிய மூன்று ஆடவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனை காஜாங் போலீஸ் தலைவர் முகமத் ஜைட் ஹசான் உறுதிப்படுத்தினார்.

காஜாங்கில் உள்ள ஶ்ரீ கெனாரி குடியிருப்பு பகுதியில் மூவர் பூனைக் குட்டியை  எரியூட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

கார் நிறுத்துமிடத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பில் 63 வயதுடைய மாது ஒருவர் போலீசில் புகார் செய்தார்.

இப் புகாரின் அடிப்படையில் போலீசார் அம் மூன்று ஆடவர்களையும் தேடி வருகின்றனர்.

தீக்காயங்களுக்கு இலக்கான அப்பூனைக் குட்டிக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset