நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

24 மணி நேர உணவக உரிமத்தை ரத்து செய்யும் திட்டத்தை சுகாதார அமைச்சு ஆராயும்: ஜுல்கிஃளி அஹ்மத்

புத்ராஜெயா:

24 மணி நேர உணவக உரிமத்தை ரத்து செய்யும் திட்டத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் முன்மொழிந்துள்ளது.

இந்த திட்டத்தை அமைச்சு ஆராயும் என்று அதன் அமைச்சர் ஜூல்கிஃப்ளி அஹ்மத் கூறினார்.

நாட்டில் உடல்நலம், உடல் பருமன் பிரச்சினைகளைக் குறைக்க  உணவகங்கள் 24 மணிநேரமும் செயல்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்று அச் சங்கம் கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் அமைச்சு அனைத்து தரப்பினர்களுடனும் ஒரு சந்திப்பை நடத்த வேண்டும்.

இந்த சிக்கலை விரிவாக ஆய்வு செய்யலாம். தெளிவான திசையில் பரிந்துரைக்கப்பட்ட விவகாரத்தில் தீர்வு காணப்படலாம்.

சுகாதார அமைச்சு இந்த விவகாரத்தின் ஆய்வுகள் அடிப்படையில் அடுத்த நடவடிக்கைக்காக ஒரு முன்மொழிவாக அறிக்கையை  தயாரிக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset