செய்திகள் மலேசியா
தேசியக் கூட்டணி இனவாத கூட்டணி என்ற அடையாளத்தை மலேசிய இந்திய மக்கள் கட்சி அழிக்கும்: கானா
கோலாலம்பூர்:
தேசியக் கூட்டணி இனவாத கூட்டணி என்ற அடையாளத்தை மலேசிய இந்திய மக்கள் கட்சி அழிக்கும்.
சிலாங்கூர் பெர்சத்து சாயாப் பிரிவின் துணைத் தலைவர் எஸ். ஞானப் பிரகாசம் (கானா) இதனை தெரிவித்தார்.
தேசியக் கூட்டணி ஓர் இனவாதக் கூட்டணி என பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக இந்தக் கூட்டணி இந்திய சமுதாயத்திற்கு எதுவும் செய்யாது எனவும் கூறுகின்றனர்.
ஆனால், இந்தக் கூட்டணியில் ஒரு இந்திய கட்சியை ஏற்றுக் கொள்ளப்பட்டதன் மூலம் அது அந்த எண்ணத்தை மாற்றிவிட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் பெர்சத்து வேட்பாளராகப் போட்டியிட்ட கானா,
இப் புதிய கட்சிக்கும் கூட்டணியில் உள்ள சாயாப் பிரிவுக்கும் இடையே எந்த மோதலையும் ஏற்படுத்தாது.
நான் போட்டியிட்டபோது, இந்தியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு கட்சியின் கீழ் நான் ஏன் வேட்பாளராக இருந்தேன் என்று மக்கள் என்னிடம் அடிக்கடி கேள்வி எழுப்பினர்.
ஆனால், இப்போது ஒரு இந்தியக் கட்சி கூட்டணியில் இருப்பதால், அது தானாகவே எங்களுக்கு உதவுகிறது.
இக் கட்சியின் மூலம் இந்தியர்களுக்காக தேசியக் கூட்டணி குறித்து பேச முடியும் என்று கானா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm