நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மீண்டும் அரசியலுக்கு புத்துணர்ச்சியுடன் திரும்புவேன்; இந்திய சமுதாய பிரச்சினைக்கு குரல் கொடுப்பேன்: சிவக்குமார்

கோலாலம்பூர்:

மீண்டும் அரசியலுக்கு புத்துணர்ச்சியுடன் திரும்புவதுடன் இந்திய சமுதாய பிரச்சினைக்கு குரல் கொடுப்பேன் என்று முன்னாள் மனிதவள அமைச்சரும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வி. சிவக்குமார் கூறினார்.

கடந்த தேர்தலுக்கு பின் மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றேன்.

பொறுப்பேற்ற நாள் என்னை விமர்சனம் செய்தார்கள். செய்யாத குற்றத்தை என் மீது சுமத்தினர். இறுதியில் மனிதவள அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டேன். 

இதனால் சமுதாயத்திற்கு இப்போது தமிழ் பேசும் அமைச்சர் அமைச்சரவையில் இல்லை. இது சமுதாய மக்களுக்கு தான் பாதிப்பு.

எனக்கு பின்னால் வேலை செய்தவர்கள் யார் என்று எனக்கு தெரியும். அவர்களுக்கு எதிராக நான் ஒன்றும் செய்ய போவதில்லை. செய்ததற்கான பலனை நிச்சயம் அவர்கள் அனுபவிப்பார்கள்.

இப்போது நான் ஓய்வில் இருக்கிறேன். விரைவில் முழுமையாக அரசியலுக்கு திரும்புவேன்.

அந்நேரத்தில் நிச்சயம் இந்திய சமுதாயத்தின் பிரச்சினைக்கு குரல் கொடுப்பேன் என்று சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset