செய்திகள் மலேசியா
மலேசியாவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 10.5 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யவுள்ளது: அனைத்துலக வாணிபம் & தொழில்துறையமைச்சு அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா:
மைக்ரோசாப்ட் நிறுவனம் நான்கு ஆண்டுகளில் மலேசியாவில் கிளவுட் உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் 10.5 பில்லியன் வெள்ளி முதலீடு செய்யும் என்று அனைத்துலக வாணிபம் & தொழில்துறை அமைச்சகம், மிட்டி தெரிவித்துள்ளது.
பிரதமர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்ட செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேசிய தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்தின் போது மைக்ரோசாப்ட் தலைமை செயல்முறை அதிகாரி சத்யா நாடெல்லா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
300,000 மலேசியர்களுக்கு பயிற்சி அளிப்பதையும், புதுமையான அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதையும் மைக்ரோசாப் தனது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளதை சத்யா ஒப்புக் கொண்டார்.
உலகளவில் மலேசியாவை முன்னணி இலக்கவியல் மையமாக மாற்றுவோம் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 17, 2024, 1:26 pm
தாக்குதலுக்கு முன்னதாக சந்தேக நபர் முழுமையான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளார்: ஐஜிபி
May 17, 2024, 1:22 pm
ஜொகூர் மாநில மஇகா பொருளாளர் டத்தோ கண்ணன் காலமானார்
May 17, 2024, 11:18 am
மூன்று லாரிகளை உட்படுத்திய சாலை விபத்து: லோரி ஓட்டுநர் உடல் நசுங்கி பலி
May 17, 2024, 10:50 am
சிங்கப்பூர் புதிய பிரதமர் லாரன்ஸை மலேசியா வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்
May 17, 2024, 10:47 am
பயிற்சி மருத்துவர்களைத் தேவைப்படும் மாவட்ட மருத்துவமனைகளில் பணியமர்த்தலாம்: சுகாதார அமைச்சர்
May 17, 2024, 10:46 am