நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்கூடாய் ஆற்றில் விழுந்த ஆட்டிசம் குறைப்பாடு கொண்ட சிறுவன் நீரில் மூழ்கி மரணம்

ஜொகூர் பாரு:

ஸ்கூடாய் ஜாலான் கம்போங் செபாகாட் பாருவில் நேற்றிரவு ஆற்றில் விழுந்த ஐந்து வயது ஆட்டிசம் குறைப்பாடு கொண்ட சிறுவன் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளான்.

நேற்று இரவு 11.15 மணியளவில் சம்பவம் நடந்த இடத்திலிருந்து 130 மீட்டர் தொலைவில் பாதிக்கப்பட்ட சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை ஸ்கூடாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் செயல்பாட்டு தளபதி, சைஃபுல்பஹ்ரி சஃபர் உறுதிப்படுத்தினார். 

இந்தச் சம்பவம் குறித்து நேற்று மாலை 5.59 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, ஏழு உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர் என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் விழுந்ததாக தெரிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் ஆற்றின் கரையோரத்தில் உள்ள நீரின் மேற்பரப்பில் செயல்பாட்டுக் குழு தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது.

தீயணைப்பு மீட்புக் குழு உறுப்பினர்கள் சம்பவ இடத்திலிருந்து 130 மீட்டர் ஆழத்தில் 4 மீட்டர் ஆழத்தில் பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடித்தனர் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset