செய்திகள் மலேசியா
மித்ரா திட்டத்திற்கு வழங்கப்பட்ட 30 மில்லியன் நிதி இந்தியச் சமூகத்தை அரசாங்கம் புறக்கணிக்கவில்லை என்பதை காட்டுகிறது: பிரபாகரன்
புத்ராஜெயா:
கெசுமா - மித்ரா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 30 மில்லியன் நிதியானது ஒற்றுமை அரசாங்கம் ஒருபோதும் இந்தியச் சமூகத்தை புறக்கணிக்கவில்லை என்பதை குறிக்கின்றது என்று மித்ரா சிறப்பு செயற்குழுவின் தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.
கெசுமா - மித்ரா திட்டம் என்பது மித்ரா மற்றும் மனிதவள அமைச்சகத்திற்கிடையிலான திறமையான பணியாளர்களை மாற்றுவதற்கான ஒத்துழைப்பு திட்டமாகும்.
இத்திட்டத்திற்காக அரசாங்கம் 30 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்த நடவடிக்கையானது இந்திய சமுதாயத்தின் நலனிளும் ஒற்றுமை அரசாங்கம் கவனம் செலுத்துவதைப் பிரபாகரன் சுட்டிக் காட்டினார்.
எனவே, ஒற்றுமை அரசாங்கம் இந்தியர்கள் நலனில் அக்கறை கொள்வதில்லை எனக் குறிப்பிட்ட சில தரப்பினர் அவதூறு பரப்புவதில் உண்மையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 17, 2024, 1:26 pm
தாக்குதலுக்கு முன்னதாக சந்தேக நபர் முழுமையான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளார்: ஐஜிபி
May 17, 2024, 1:22 pm
ஜொகூர் மாநில மஇகா பொருளாளர் டத்தோ கண்ணன் காலமானார்
May 17, 2024, 11:18 am
மூன்று லாரிகளை உட்படுத்திய சாலை விபத்து: லோரி ஓட்டுநர் உடல் நசுங்கி பலி
May 17, 2024, 10:50 am
சிங்கப்பூர் புதிய பிரதமர் லாரன்ஸை மலேசியா வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்
May 17, 2024, 10:47 am
பயிற்சி மருத்துவர்களைத் தேவைப்படும் மாவட்ட மருத்துவமனைகளில் பணியமர்த்தலாம்: சுகாதார அமைச்சர்
May 17, 2024, 10:46 am