நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

42 ஆண்டுகளுக்குப் பிறகு 78 வயதில் மூதாட்டி மீண்டும் காதல் திருமணம் 

கோலாலம்பூர்: 

42 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த 78 வயது மூதாட்டி ரோஹானி முஹம்மத் காசிம் 77 வயதான யூசோப் எம்பியைக் காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.

எட்டு குழந்தைகள், 44 பேரக்குழந்தைகள் மற்றும் 15 கொள்ளு பேரக்குழந்தைகளைக் கொண்ட ரோஹானி மீண்டும் காதல் வையப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.  

தன் நண்பர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட  யூசோப் எம்பியை ரோஹானி காதலித்து மறுமணம் செய்து கொண்டார். 

ரோஹானி அவரது குழந்தைகளிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, இந்தாண்டு மறுமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டார்.

42 ஆண்டுகளாக விதவையாக இருக்கும் தனக்கு இறைவன் ஒரு வாழ்க்கை துணையைக் கொடுத்து ஆசிர்வதித்துள்ளான் என்று அவர் நெகிழ்ச்சி தெரிவித்தார். 

ஒரு வாரம் ஒருவரையொருவர் தெரிந்து கொண்ட பிறகு யுசோப் தன்னை மணந்து கொள்வது குறித்து ரோஹானியிடம் ஒப்புதல் பெற்ற பிறகு இந்தத் திருமணம் நடந்துள்ள௹ஊ.

இந்தத் திருமணம் இரு குடும்பங்களிலிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளது. மேலும் எனது குழந்தைகள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் கூட இந்த நேர்மையான நோக்கத்தை ஆதரிக்கின்றனர்.

இந்த உறவு இறுதி வரை நீடிக்கும் என்று ரோஹானி நம்பிக்கை தெரிவித்தார். 

 2021-ஆம் ஆண்டில் யுசோப்பின் மனைவி காலமானார். தன் குழந்தைகள் தங்கள் சொந்த கடமைகளில் பரபரப்பாக இருப்பதால் இறைவன் தன்னைப் பார்த்துக் கொள்ள ரோஹானியை அனுப்பியதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset