நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீப்பிடித்த கப்பலில் சிக்கிய 12 பணியாளர்கள் மீட்பு

ஜொகூர்பாரு:

தீப்பிடித்த கப்பலில் சிக்கிய  12 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இதனை மலேசிய கடற்படை இயக்குநர் நூருல் ஹிசாம் ஜக்காரியா உறுதிப்படுத்தினார்.

தான்சானியாவைச் சேர்ந்த கப்பல் மெர்சிங் லீகா தீவின் அருகே சென்ற போது தீப்பிடித்து எரிந்ததாக தகவல் கிடைத்தது.

சம்பந்தப்பட்ட இடத்திற்கு ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த அதிகாரிகள் சென்றனர்.

ஆனால் அங்கு தீப்பிடித்த கப்பல் இல்லை.

அதன் பின் சம்பந்தப்பட்ட கப்பல் இந்தோனேசியாவின் பின்தான் தீவுக்கு அருகே தீப்பிடித்தது உறுதி செய்யப்பட்டது.

தீப்பிடித்த கப்பலில் 12 பணியாளர்கள் சிக்கு தவித்தனர்.

அவர்களை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டு ஜொகூர் தஞ்சோங் பூங்காய்க்கு கொண்டு வந்தனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset