செய்திகள் மலேசியா
டஜன் கணக்கான அரிசி மூட்டைகள், சார்டின்கள் குப்பை கிடங்கில் வீசப்பட்டன
தெமர்லோ:
டஜன் கணக்கான அரிசி மூட்டைகள், சார்டின்கள், மாவு பேக்கேட்கள் குப்பை கிடங்கில் வீசப்பட்டுள்ளன.
இது தொடர்பான வீடியோ படிவுகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
தெமர்லோவின் ரும்புன் மக்முர் - கம்போங் சென்யும் செல்லும் சாலையில் குப்பைகளை அழிக்கும் கிடங்கு உள்ளது.
அந்த குப்பை கிடங்கில் டஜன் கணக்கான அரிசி மூட்டைகள் உட்பட பல உணவு பொருட்கள் வீசப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
குறிப்பாக சந்தையில் தற்போது வெள்ளை அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால் இந்த சம்பவம் எதிர்மறையாக கருத்துகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.இந்த செயலுக்கு இதுவரை எந்த தரப்பும் பொறுப்பேற்கவில்லை.
அதே வேளையில் கடந்த 15வது பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதி ஒருவரால் இந்தச் செயலைச் செய்ததாக சமூக ஊடகப் பயனர் ஒருவர் கூறியுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினைக்கு தீர்வு மே 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு?
May 2, 2024, 1:22 pm
42 ஆண்டுகளுக்குப் பிறகு 78 வயதில் மூதாட்டி மீண்டும் காதல் திருமணம்
May 2, 2024, 1:00 pm