நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டஜன் கணக்கான அரிசி மூட்டைகள், சார்டின்கள் குப்பை கிடங்கில் வீசப்பட்டன

தெமர்லோ:

டஜன் கணக்கான அரிசி மூட்டைகள், சார்டின்கள், மாவு பேக்கேட்கள் குப்பை கிடங்கில் வீசப்பட்டுள்ளன.

இது தொடர்பான வீடியோ படிவுகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

தெமர்லோவின் ரும்புன் மக்முர் - கம்போங் சென்யும் செல்லும் சாலையில் குப்பைகளை அழிக்கும் கிடங்கு உள்ளது.

அந்த குப்பை கிடங்கில் டஜன் கணக்கான அரிசி மூட்டைகள் உட்பட பல உணவு பொருட்கள் வீசப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

குறிப்பாக சந்தையில் தற்போது வெள்ளை அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால் இந்த சம்பவம் எதிர்மறையாக கருத்துகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.இந்த செயலுக்கு இதுவரை எந்த தரப்பும் பொறுப்பேற்கவில்லை.

அதே வேளையில் கடந்த 15வது பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதி ஒருவரால் இந்தச் செயலைச் செய்ததாக சமூக ஊடகப் பயனர் ஒருவர் கூறியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset