நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

14,000க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற  இஸ்ரேல் ஹிட்லரையே மிஞ்சியது: எர்டகோன்

அன்காரா:

14,000க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற  இஸ்ரேல் ஹிட்லரையே மிஞ்சி விட்டது.

துருக்கு அதிபர் ரெஜெப் தய்யீப் எர்டகோன் இதனை தெரிவித்தார்.

காசாவில் 14,000 அப்பாவி குழந்தைகளை கொன்ற இஸ்ரேல் ஏற்கெனவே ஹிட்லரின் அட்டூழியங்களை முறியடித்து விட்டது.

மேற்கத்திய நாடுகளின் நிபந்தனையற்ற ஆதரவுடன் காஸா, மேற்குக் கரையில் மனித வரலாற்றில் ஒரு வெட்கக்கேடான அடையாளமாக இனப்படுகொலை இஸ்ரேல் செய்தது.

பாலஸ்தீனப் பிரச்சினையில் துர்கியேவின் உணர்வை யாரும் கேள்வி கேட்க முடியாது.

பாலஸ்தீனப் போராட்டம் எனது வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தைக் கொடுத்துள்ளது.

நான் உயிருடன் இருக்கும் வரை, நான் பாலஸ்தீன பிரச்சினையை தொடர்ந்து பாதுகாப்பேன்.

ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் குரலாக இருப்பேன் என்று ருக்கிய நாடாளுமன்றத்தில் நீதி, மேம்பாட்டுக் கட்சி குழு கூட்டத்தில்  பேசிய எர்டகோன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset