நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியா ஜாவா தீவில்  6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி 

ஜாகர்த்தா:

இந்தோனேசியாவில் இருக்கும் தீவான ஜாவாவின் தெற்குப் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மக்கள் பீதி அடைந்துள்ளனர். 

திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் தற்போது வரை சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருக்கும் உயரமான அடுக்குமாடி கட்டிடங்கள் சுமார் ஒரு நிமிடம் நடுங்கியுள்ளன. 

மேற்கு ஜாவா மாகாண தலைநகரான பண்டோங், ஜகார்த்தாவின் பல நகரங்களில் உள்ள மாடி வீடுகள் பலமாக குலுங்கியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். 

மேலும், இந்த நிலநடுக்கம் மேற்கு ஜாவா, யோககர்த்தா மற்றும் கிழக்கு ஜாவாவில்  உள்ள மற்ற நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் மையம் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset