செய்திகள் உலகம்
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
ஜாகர்த்தா:
இந்தோனேசியாவில் இருக்கும் தீவான ஜாவாவின் தெற்குப் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் தற்போது வரை சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருக்கும் உயரமான அடுக்குமாடி கட்டிடங்கள் சுமார் ஒரு நிமிடம் நடுங்கியுள்ளன.
மேற்கு ஜாவா மாகாண தலைநகரான பண்டோங், ஜகார்த்தாவின் பல நகரங்களில் உள்ள மாடி வீடுகள் பலமாக குலுங்கியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
மேலும், இந்த நிலநடுக்கம் மேற்கு ஜாவா, யோககர்த்தா மற்றும் கிழக்கு ஜாவாவில் உள்ள மற்ற நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் மையம் தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 14, 2024, 6:44 pm
ராஃபா நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவ குடும்பத்தினர் எதிர்ப்பு
May 14, 2024, 6:06 pm
பொருளியல் மந்தநிலையால் நியூசிலாந்திலிருந்து வெளியேறும் மக்கள்
May 14, 2024, 4:18 pm
கோளாறு ஏற்பட்ட விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கிய விமானி
May 14, 2024, 12:44 pm
இந்தோனேசியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு
May 14, 2024, 11:24 am
நேப்பாள அரசியலில் பரபரப்பு: துணைப்பிரதமர் பதவியிலிருந்து உபேந்திர யாதவ் விலகல்
May 14, 2024, 10:39 am
பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகல் கடிதத்தை அதிபரிடம் வழங்கினார்
May 13, 2024, 5:23 pm
இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு: 28 பேர் உயிரிழப்பு
May 12, 2024, 9:37 pm