நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விமான ஓடுபாதையில் யோகாசனம்

பேங்காக்:

தாய்லந்துத் தலைநகர் பேங்காக் விமான நிலைய ஓடுபாதையில் 500 பேர் கலந்துகொண்ட மிகப் பெரிய யோகாசனப் பயிற்சி நடைபெற்றது.

விமான நிலையத்தின் 3ஆவது ஓடுபாதை இன்னும் கட்டப்பட்டு வருகிறது. அந்த ஓடுபாதையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

யோகாவில் கலந்துகொண்டவர்களுக்கு இளநீர், ஐஸ் தேநீர், தண்ணீர் ஆகியவை கொடுக்கப்பட்டன.

யோகாசனத்தில் பங்கேற்பதற்காக அவர்கள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் விமான நிலையத்தில் குவியத் தொடங்கினர்.

சூரியன் உதிக்கும்போது அவர்கள் யோகாசனத்தை ஆரம்பித்தனர்.

பேங்காக்கில் தற்போது காற்றின் தரம் மோசமாக இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பயிற்சியில் பங்கேற்றனர்.

பங்கேற்பாளர்களில் பெண்களே அதிகம் என்று கூறப்பட்டது.

ஆதாரம்: AFP  

தொடர்புடைய செய்திகள்

+ - reset