செய்திகள் மலேசியா
கோல குபு பாரு தமிழ்ப்பள்ளி சீரமைப்புக்கு மேலும் 20,000 ரிங்கிட்: கல்வி துணையமைச்சர்
கோல குபு பாரு:
உலு சிலாங்கூர் கோல குபு பாரு தமிழ்ப்பள்ளி சீரமைப்புக்கு மேலும் 20,000 ரிங்கிட் வழங்கப்படும்.
கல்வி துணையமைச்சர் வோங் கா வோ இதனை அறிவித்தார்-
கோல குபு பாரு தமிழ்ப் பள்ளிக்கு துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ இன்று காலை சிறப்பு வருகை புரிந்தார்.
கல்வியமைச்சு கொடுத்த மானியம் முறையாக பயன்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்யும் நோக்கிலேயே தாமும் கல்வி அமைச்சும் ஒவ்வொரு பள்ளியிலும் பார்வையிட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அந்த வகையில் இன்று கோலா குபு பாரு தமிழ்ப்பள்ளிக்கு வந்திருப்பதாக அவர் கூறினார்.
இந்தப் பள்ளியின் மறு சீரமைப்பு பணிகளுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 70,000 ரிங்கிட் முறையாக பயன்படுத்திய பள்ளி நிர்வாகத்தை துணை கல்வியமைச்சர் வோங் கா வோ பாராட்டினார்.
இந்த ஆண்டு 20,000 ரிங்கிட் வழங்கப்பட்டிருக்கும் வேளையில் பள்ளியின் கதவுகள், இதர சீரமைப்பு பணிகளுக்கு உதவ கூடுதலாக 20,000 ரிங்கிட் ஒதுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
முன்னதாக பள்ளிக்கு வருகை புரிந்த துணைக் கல்வி அமைச்சருக்கு பள்ளி நிர்வாகம், மாணவர்கள் உற்சாக வரவேற்பை வழங்கினார்.
பள்ளிக்கு வருகை புரிந்து உதவிகளை வழங்க முன் வந்திருக்கும் துணைக் கல்வி அமைச்சருக்கு பள்ளி நிர்வாக சார்பில் பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயமல்லிகா மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2024, 4:38 pm
3.3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக நீர் நிறுவனத்தின் 2 அதிகாரிகள் கைது
April 30, 2024, 4:14 pm
மாமன்னருக்கு எதிரான அவதூறு: பாப்பாகோமோவைக் கைது செய்தது போலீஸ்
April 30, 2024, 3:27 pm
பெர்லிஸ் மந்திரி பெசாரிடம் விசாரணை நிறைவடைந்தது
April 30, 2024, 3:15 pm
உலு சிலாங்கூரின் 5 தோட்ட மக்கள் பிரச்சினைக்கு எடுத்தவுடனே தீர்வு காண முடியாது: பாப்பாராயுடு
April 30, 2024, 1:33 pm
கேசினோ பிரச்சனை தொடர்பான பதிவுகள்: சேகு பார்ட் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
April 30, 2024, 1:31 pm
பொட்டலம் மீது வெடிகுண்டு மிரட்டல் வாசகத்தை எழுதிய ஆடவருக்கு 3,000 வெள்ளி அபராதம்
April 30, 2024, 12:22 pm
பெர்லிஸ் மந்திரி பெசார் எம்ஏசிசி-யால் கைது செய்யப்பட்டார்
April 30, 2024, 11:47 am