நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாருவில் பிரதமர் பிரச்சாரம் செய்ய மாட்டார்: ஃபஹ்மி கோடிக்காட்டினார்

உலுசிலாங்கூர்:

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கோல குபு பாருவில் நடைபெறும் பரப்புரைகளில் கலந்துகொள்ள மாட்டார்.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் இதனை கோடிக் காட்டினார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளராக பாங் சாக் தாவ் போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக பிரதமர் பிரச்சாரங்களை செய்ய இங்கு வரமாட்டார்.

இதற்குமுன் நடைபெற்ற பல இடைத் தேர்தல்களின் போது பிரதமர் பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை.

அதன் தொடச்சியாக பிரதமர் அநேகமாக இங்கும் வரமாட்டார்.

பிரதமர் எப்போது கோல குபு பாருவில் இருப்பார் என்பது குறித்து, எனக்கு இன்னும் தெரியாது. 

நான் அவருடன் தொடர்பில் இல்லை என்றும் ஃபஹ்மி கூறினார்.

இதனிடையே இந்த விவகாரம் எதிர்க்கட்சி கூட்டணி பிரச்சார மேடைகளில் முக்கிய விவாத தலைப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset