நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்லிஸ் மந்திரி பெசார் எம்ஏசிசி-யால் கைது செய்யப்பட்டார்

கோலாலம்பூர்: 

பெர்லிஸ் மந்திரி பெசார் முஹம்மத் சுக்ரி ரம்லி இன்று காலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி-யால் கைது செய்யப்பட்டார்.

அதிகாரிகளிடம் சாட்சியமளிக்க வந்த பின்னர் அவர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியிடுப்பட்டிருந்தன.

அவர் அதிகாரத் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார் என்பது தெரிய வந்துள்ளது.

முஹம்மத் சுக்ரி ரம்லி தற்போது எம்ஏசிசி-யின் தலைமையகத்தில் இருப்பது எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.

பெர்லிஸின் பாஸ் கமிஷனர் கைது செய்யப்பட்டாரா என்று கேட்டபோது, ​​கைது செய்யப்படுவதற்கான சாத்தியத்தை அவரது தரப்பு நிராகரிக்கவில்லை என்று அசாம் கூறினார்.

எவ்வாறாயினும், எம்ஏசிசி வழங்கிய அறிக்கையில் திருப்தியடையும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதி விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset