நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாமன்னருக்கு எதிரான அவதூறு: பாப்பாகோமோவைக் கைது செய்தது போலீஸ் 

கோலாலம்பூர்: 

மாமன்னருக்கு எதிராக அவதூறு பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் சர்ச்சைக்குரிய வலைத்தள பதிவாளர் பாப்பாகோமோ போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

இந்த தகவலை அரச மலேசிய காவல்படையின் தலைவர் ஐ.ஜி.பி டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் உறுதிப்படுத்தினார். 

வான் முஹம்மத் அஸ்ரி அல்லது பாப்பாகோமோ என்றழைக்கப்படும் அந்த வலைத்தள பதிவாளர் ஸ்தாப்பாக்கில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். 

1948ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டம், 1998ஆம் ஆண்டு தொடர்பு பல்லூடக சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் பாப்பாகோமோ டாங் வாங்கி காவல் நிலையத்தில் விசாரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

மாமன்னருக்கு எதிராக அவதூறு கருத்துக்களைப் பதிவிட்டதால் பாப்பாகோமோவிற்கு எதிராக கண்டங்களும் போலீஸ் புகார்களும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் காவல்துறை இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset