நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3.3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக நீர் நிறுவனத்தின் 2 அதிகாரிகள் கைது

கோலாலம்பூர்:

3.3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக நீர் நிறுவனத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்தது.

குத்தகை நிறுவன உரிமையாளர்களிடம் அவர்கள் இந்த கையூட்டை பெற்றதாக நம்பப்படுகிறது.

36,  40 வயதுடைய இருவரும் நேற்று பிற்பகல் 2 மணியளவில் சிலாங்கூர் எம்ஏசிசி அலுவலகத்தில் கைது செய்யப்பட்டதாக  கூறப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் அவர்கள் மீது பல்வேறு தரப்பினரிடம் பெறப்பட்ட பல புகார்கள் மீது விசாரணை செய்யப்பட்டது.

இந்த இரண்டு சந்தேக நபர்களும் இரண்டு ஒப்பந்ததாரர் நிறுவனங்களின் உரிமையாளர்களிடமிருந்து கையூட்டு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset