நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போவில் 13ஆவது மாடியில் விழுந்ததாக நம்பப்படும் முதியவரின் சடலம் மீட்பு

ஈப்போ:

ஈப்போவில் 13ஆவது மாடியில் விழுந்ததாக நம்பப்படும் முதியவரின் சடலத்தை போலீசார் மீட்டனர்.

ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அபாங் ஜைனால் அபிடின் இதனை கூறினார்.

பெர்சியாரான் பண்டார் தீமாவில் உள்ள அடுக்குமாடியின் கீழ் தளத்தில் சம்பந்தப்பட்ட முதியவரின் உடல் கிடப்பதை பாதுகாவலர் கண்டனர்.

உடனே இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஆரம்பக் கட்ட விசாரணையில்   இறந்தவர்  குடியிருப்பின் 13ஆவது மாடியில் இருந்து விழுந்ததாக நம்பப்படுகிறது.

மரணமடைந்தவருக்கு வயது 91ஆகும்.

இறந்தவரின் உடலை பரிசோதித்தபோது குற்றத்திற்கான எந்த கூறுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இது திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பிரேதப் பரிசோதனையின் முடிவுக்காக போலீஸ் காத்திருக்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset