நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

5 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் பணி ஓய்வு பெற்ற இராணுவ வீரர் மரணம்

சிரம்பான்: 

சிரம்பான்-தம்பின் சாலையில் நேற்று மதியம் 5 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் 74 வயதான பணி ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உயிரிழந்தார்.

இந்த விபத்து ஒரு பேருந்து, ஒரு லாரி, இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை உட்படுத்தியது என்று சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் முஹம்மத் ஹத்தா சே டின் கூறினார்.

ஆண் பெண் இருவர் அம்பாங்கனிலிருந்து போர்ட்டிக்சன் நோக்கிச் சென்ற புரோட்டான் வீரா ரக கார் இடது பாதையில் பழுதாகி நின்றுகொண்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பின்னர் ஒரு ஹூண்டாய் கெட்ஸ் வகை கார் புரோட்டான் வீராவின் பின்புறத்தில் மோதியதாக நம்பப்படுகிறது. 

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு நபர் ஓட்டிச் சென்ற ஹோண்டா வேவ் ரக மோட்டார் சைக்கிள் ஆரம்ப விபத்தில் சிக்கிய வாகனத்திற்கு உதவ நிறுத்தப்பட்டது.

அதற்குப் பிறகு, அதே திசையில் இருந்து மூன்று ஆண் பயணிகளுடன் ஒரு நபர் ஓட்டிச் சென்ற ஹினோ வகை லாரிவலது பாதையில் பாதையை மாற்றுவதற்காக விபத்துக்குள்ளான காரின் பின்னால் நிறுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

திடீரென்று லாரி, 40 தொழிற்சாலை ஊழியர்களுடன் ஒரு நபர் ஓட்டிச் சென்ற பேருந்து மீது மோதியது.

இதனால் லாரி புரோட்டான் வீரா கார், ஹூண்டாய் கெட்ஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதியது என்று அவர் கூறினார்.

விபத்தின் விளைவாக, புரோட்டான் வீரா கார் ஓட்டுநர்  தலையில் காயமடைந்து விபத்து நடந்த இடத்திலேயே இறந்தார். 

ஹூண்டாய் கெட்ஸ் ஓட்டுநர் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயம் ஏற்பட்டது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset