நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பங் சொக் தவ் வெள்ளிக்கிழமை தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறார் 

கோலாலம்பூர்: 

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பாங் சொக் தவ் வெள்ளிக்கிழமை தமது தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கவுள்ளார். 

பல்வேறு நலத்திட்ட உதவிகளுடனும் குறிப்பாக பழங்குடியின சமூக மக்களின் மேம்பாடுகளை முன்னிருத்தி இந்த தேர்தல் வாக்குறுதி அமைக்கப்பட்டுள்ளதாக பங் சொக் தவ் கூறினார். 

கோலகுபு பாரு மக்களுக்காக என்னென்ன திட்டங்கள் கொண்டிருக்கிறோம் என்பதை வெள்ளிக்கிழமை அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் என்று அவர் தெரிவித்தார். 

நம்பிக்கை கூட்டணி கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியைத் தற்காக்க அமைச்சர் ஙா கோர் மிங்கி முன்னாள் பத்திரிகை செயலாளர் பங் சொக் தவ்வை வேட்பாளராக களமிறக்கியுள்ளது. 

மே 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset