செய்திகள் மலேசியா
அன்பும் அக்கறையும் வேண்டாம்; அனைவரையும் சமமாக அரசாங்கம் வழிநடத்த வேண்டும்: டாக்டர் பி.ராமசாமி
கோலாலம்பூர்:
அன்பும் அக்கறையும் தமக்கு வேண்டாம்; மாறாக நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் சமமாக அரசாங்கம் வழிநடத்த வேண்டும் என்று உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி கூறினார்.
எதிர்கட்சி தரப்புடன் எந்தவொரு பிணக்குகளும் இல்லை. இருப்பினும் நடப்பு அரசாங்கம் இந்தியர்களுக்கு சரிசமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று முன்னாள் பினாங்கு மாநில இரண்டாவது துணை முதல்வருமான அவர் தெரிவித்தார்.
மேலும், அரசு மற்றும் பொது துறைகளில் இந்தியர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். பல்கலைக்கழகம், மெட்ரிகுலேஷன் வாய்ப்புகளிலும் இந்திய மாணவர்கள் முன்னேறுவதற்கு வாய்ப்புகளும் வழங்கப்படுவதில்லை என்று இராமசாமி குற்றஞ்சாட்டினார்.
கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற பிரச்சாரத்தை பேராசிரியர் டாக்டர் இராமசாமி தலைமையிலான உரிமை கட்சி முன்னெடுத்துள்ளது.
முன்னதாக, நம்பிக்கை கூட்டணிக்கு எதிராக இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும் என்று இராமசாமி கூறிய நிலையில் அவர் நம்பிக்கை கூட்டணி மீது அன்பும் அக்கறையும் கொள்ளவில்லை என்று தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 21, 2024, 1:09 pm
பிரதமர் இரவு 9 மணிக்கு மக்களிடம் நேரலையில் உரையாற்றுகிறார்
May 21, 2024, 12:15 pm
ராஃபாவிலிருந்து மருத்துவக் குழுவை மீட்க நட்பு நாடுகளுடன் மலேசியா ஒத்துழைப்பு: விஸ்மா புத்ரா
May 21, 2024, 12:11 pm
இசையமைப்பாளர் ஜெய்-க்கு இசைக்கலை சுடர்மணி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது
May 21, 2024, 12:06 pm
வெளிநாடு வாழ் தமிழர்கள் மன்றத்தின் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
May 21, 2024, 11:23 am
வாவாசான் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட ஆடவர் பலி
May 21, 2024, 11:17 am
இஸ்ரேலிய ஆடவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
May 21, 2024, 11:10 am