நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அல்லாஹ் விவகாரத்தில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் பலவீனமாக செயல்பட்டார்: கைரி ஜமாலுடின் கருத்து 

கோலாலம்பூர்: 

அல்லாஹ் விவகாரத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பலவீனமாக செயல்பட்டதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தமது கருத்தினை முன்வைத்துள்ளார். 

அல்லாஹ் விவகாரம் தொடர்பில் தமது அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர் தாக்கப்பட்ட போது அன்வார் இப்ராஹிம் அதனை தற்காக்கவில்லை என்று கைரி ஜமாலுடின் குறிப்பிட்டார். 

ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கும் அம்னோவே இந்த விவகாரத்தை கையாளும் போது சுமூகமான தீர்வினை எட்ட பிரதமர் தாமதம் காட்டியதாக அவர் சொன்னார். 

காலுறையில் அல்லாஹ் விவகாரம் போல இன பதற்றத்தை ஏற்படுத்தும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் அரங்கேறாமல் இருக்க மடானி அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று KELUAR SEKEJAP நிகழ்ச்சின் போது அவர் கேட்டுக்கொண்டார்.

--மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset