நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கள் பிரச்சினைகளில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்

ஜார்ஜ்டவுன்:

மக்கள் பிரச்சினை, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்.

அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை கூறினார்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பினாங்கு மாநில தொடர்புக் குழுவின் சிறப்பு சந்திப்புக் கூட்டம் பினாங்கில் நடைபெற்றது.

கட்சியின் மகளிர் பிரிவு ஆலோசகர் டத்தின்ஶ்ரீ வேணி, பினாங்கு மாநில துணைத் தலைவர் லோலேந்திரன், உதவித் தலைவர் டாக்டர் பிரசாத், இளைஞர் பிரிவுத் தலைவர் வீர ரகு தேவன், மாநில செயலாளர் சாந்தி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

குறிப்பாக மக்கள் பிரச்சினை, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்.

அதே வேளையில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் சந்திப்புக் கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்று டத்தோஶ்ரீ  தனேந்திரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset