நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து: மூதாட்டி கருகி  மரணம் 

சண்டாகான்: 
கம்போங் சுங்கை காப்போர் எனுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த தீ விபத்தினால் 84 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உடல் கருகி மரணம் அடைந்தார். 

நள்ளிரவு 12.41 மணியளவில் தங்கள் தரப்புக்கு இந்த தீ விபத்து தொடர்பாக அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதாக சண்டாகான் நிலைய மற்றும் மீட்புப்படையின் தலைவர் செவெரினுஸ் சைன்குல் கூறினார் 

சுமார் 12 தீயணைப்பு வீரர்களும் அதிகாரிகளும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு அதிகாலை 3.17 மணிக்கு மீட்புப்பணிகள் நிறைவு பெற்றது என்று அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டார். 

இருப்பினும், ஓர் உயிர்சேதம் ஏற்பட்டது.  84 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உடல் கருகி மரணம் அடைந்தார் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset