நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் இருக்கும்வரை டத்தோஸ்ரீ சரவணன்தான் துணைத் தலைவர்; எந்தக் கொம்பனாலும் அதை மாற்ற முடியாது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் தான்.

இதை எந்தக் கொம்பனாலும் மாற்ற முடியாது என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

மஇகாவின் தேர்தல் குறித்து கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்கள் பேசுகின்றனர். குறிப்பாக ஆதரவு கேட்டதாக கூறுகின்றார்கள்.

என்னை பொருத்த வரையில் நான் யாரிடமும் சென்று ஆதரவு கேட்கவில்லை. கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. 

கையால் ஆகாதவன் தான் அப்படி செய்வார்கள்.

மஇகா கட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மற்ற பதவிகளுக்கு எல்லாம் போட்டியிருக்கலாம்.

ஆனால், நான் இருக்கும் வரை டத்தோஸ்ரீ சரவணன் தான் துணைத் தலைவர். இதை எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது.

நான் வேண்டும் என்றால் வெளிப்படையாக சவால் விடுகிறேன்.

மேலும் கட்சியில் இல்லாதவர்கள் எல்லாம் மஇகாவை பற்றி பேசுவதில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை.

மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset