நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காஜாங்கில் ஆறு மாத குழந்தை மரணம்; தந்தையைக் கைது செய்தது போலீஸ் 

காஜாங்: 

ஆறு மாத குழந்தை ஒன்று தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மரணமடைந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் அவரின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தலையில் காயங்களுக்கு இலக்கான  குழந்தை சுயநினைவின்றி கிடந்த நிலையில் பிறகு பரிசோதனை மேற்கொண்டதில் குழந்தை மரணமடைந்து விட்டதாக காஜாங் மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் சூப்ரிடென்டன்ட் முஹம்மத் நஸிர் கூறினார். 

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தையிடமிருந்து காலை 8.52 மணிக்கு புகார் கிடைக்கப்பெற்றது.உடற்கூறு ஆய்வில் குழந்தையை யாரோ பலமாக தாக்கியிருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டார். 

இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302 கொலை குற்றச்சாட்டின் கீழ் வகைபடுத்தி போலீசார் விசாரணையை மேற்கொள்கிறது. 

கைது செய்யப்பட்ட 25 வயது மதிக்கத்தக்க குழந்தையின் தந்தை ஷாபு வகை போதைப்பொருளை உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. 

குழந்தை மரணம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் அளிக்கலாம் என்று முஹம்மத் நஸிர் கேட்டுக்கொண்டார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset