நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலால் தங்கம், எண்ணெய் விலை உயர்வு

கோலாலம்பூர்:

கடந்த வார இறுதியில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில் இருந்து தங்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

சிஐஎம்பியின் சந்தை ஆராய்ச்சி அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கு ஆசியாவில் மோதல்கள் அதிகரித்து வருவதால்  தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் அமெரிக்க டாலர் 2,420 ஆக (11,537.30 ரிங்கிட்) உயர்வு கண்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஒரு கிராம் தங்கம் 370.93 ரிங்கிட் என்ற புதிய விலைஉயர்வைக் கண்டது. 

இதற்கு முன் ஒரு கிராம் தங்கம் 360.20 ரிங்கிட்டாக இருந்தது.

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 92 அமெரிக்க டாலர் என்பதை 0.8 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 90.5 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

ஈரான், இஸ்ரேல் மோதல் நீடிக்கும் பட்சத்தில் தங்கம், கச்சா எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset