செய்திகள் மலேசியா
கெரிக்-ஜெலி சாலையில் கார் மோதி யானை உயிரிழந்தது
ஈப்போ:
கெரிக்-ஜெலி சாலையின் 50-ஆவது கிலோமீட்டரில் கார் மோதியதில் 20 வயதுடைய யானை உயிரிழந்தது.
கிளந்தானிலிருந்து கெரிக் நோக்கி பயணித்த எஸ்யூவி ரக கார் யானை மீது மோதியது.
யானை திடீரென சாலையைக் கடக்க முயன்றதாலும் கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து யானை மீது மோதியுள்ளார்.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அனைவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பேராக் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறையின் இயக்குனர் யூசோப் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, சாலை விபத்தில் யானை இறந்தது தொடர்பான காணொளிகள்சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்த விபத்து எந்த உயிரிழப்புகளையும் ஏற்படுத்தவில்லை.
யானை மீது மோதியதன் விளைவாகக் குறைந்தது இரு வாகனங்கள் சேதமடைந்ததாக நம்பப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm