செய்திகள் மலேசியா
கெசுமா - மித்ரா திட்டத்திற்கு நிதி வழங்கும் பிரதமரின் அறிவிப்பை மனிதவள அமைச்சு வரவேற்கின்றது: மனிதவள அமைச்சர் ஸ்டிவன் சிம்
கோலாலம்பூர்:
மனிதவள அமைச்சு, கெசுமாவும் மித்ராவும் இணைந்து செயல்படுத்தவுள்ள இந்திய சமூகத்தின் இளைஞர்களுக்கான திறன்களை மேம்படுத்தும் திட்டமான (மிசி)-க்கு 30 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற பிரதமர் அன்வாரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று மனிதவள அமைச்சர் ஸ்டிவன் சிம் தெரிவித்துள்ளார்.
மனிதவள அமைச்சுடன் மித்ராவும் இணைந்து திறமையான பணியாளர்களை உருவாக்குவதற்கு மிசி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய சமூக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்த நிதி கெசுமாவின் மூலமாக நிதியமைச்சு, மலேசிய இந்தியச் சமூக உருமாற்று பிரிவான, மித்ரா, எச்ஆர்டி கோர்ப் ஆகியவற்றுக்கு அனுப்பப்படும் என்றும் ஸ்டிவன் சிம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முன்முயற்சியானது தொழில்துறையின் தேவைகளையும் நாட்டின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் முக்கியமான கடப்பாட்டைக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டமானது கெசுமா 3K எனப்படும் ஊழியர்களின் திறன்கள், வெற்றி மற்றும் நலனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இந்த நடவடிக்கையானது இந்திய சமுதாயத்தின் நலனிளும் ஒற்றுமை அரசாங்கம் கவனம் செலுத்துவதைப் ஸ்டிவன் சிம் சுட்டிக் காட்டினார்.
மனிதவள அமைச்சும் மித்ராவும் இணைந்து செயல்படுத்தும் மிசி பயிற்சி திட்டங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஸ்டிவன் சிம் தனது அறிக்கையில் கூறினார்.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 17, 2024, 1:26 pm
தாக்குதலுக்கு முன்னதாக சந்தேக நபர் முழுமையான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளார்: ஐஜிபி
May 17, 2024, 1:22 pm
ஜொகூர் மாநில மஇகா பொருளாளர் டத்தோ கண்ணன் காலமானார்
May 17, 2024, 11:18 am
மூன்று லாரிகளை உட்படுத்திய சாலை விபத்து: லோரி ஓட்டுநர் உடல் நசுங்கி பலி
May 17, 2024, 10:50 am
சிங்கப்பூர் புதிய பிரதமர் லாரன்ஸை மலேசியா வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்
May 17, 2024, 10:47 am
பயிற்சி மருத்துவர்களைத் தேவைப்படும் மாவட்ட மருத்துவமனைகளில் பணியமர்த்தலாம்: சுகாதார அமைச்சர்
May 17, 2024, 10:46 am