செய்திகள் மலேசியா
மலாக்காவில் வெள்ளம்: 122 பேர் பாதிப்பு
மலாக்கா:
மலாக்காவில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால் 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 8 மணி வரை அம்மாநிலத்தில் 3 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அலோர் காஜாவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 72 பேர் டுரியான் துங்கால் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
அதே போன்று 38 பேர் புக்கிட் பாலாய் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
மத்திய மலாக்காவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
இதனை பேரிடர் நிர்வாக பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm