செய்திகள் மலேசியா
KLIA துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபரின் புகைப்படங்கள்; நாட்டின் நுழைவாயில்களில் வழங்கப்பட்டது: ஐஜிபி
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரின் புகைப்படங்களை நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அண்டை நாடுகளின் அதிகாரிகளுக்கும் போலீசார் விநியோகித்துள்ளனர் தேசிய போலீஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார்.
மெய்ப்பாதுகாவலருக்கு பலத்த காயம் ஏற்படுத்திய சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை அவரது தரப்பினர் அடையாளம் காணூம் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஹஃபிசுல் ஹராவி (38) என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில் தேசிய எல்லையில் போலீஸ்படையினர் பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளதாக அவர் கூறினார்.
ஹஃபிசுல் இன்னும் நாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது.
மேலும் அந்த நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm