செய்திகள் மலேசியா
இந்திய சமூகத்திற்கு மித்ரா மட்டும் பிரச்சினை அல்ல: பிரதமர்
ஷாஆலம்:
இந்திய சமூகத்திற்கு மித்ரா மட்டும் பிரச்சினை அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அண்மைய காலமாக மித்ரா தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் சர்ச்சைகள் எழுந்து வருகிறது.
மித்ராவுக்கு ஒதுக்கப்படும் அனைத்து நிதிகளும் முறையாக கண்காணிக்கப்படுகிறது.
மித்ராவில் செலவிடப்படும் அனைத்து தொகைகளும் தணிக்கை கண்காய்வு செய்யப்படுகிறது.
ஆகவே இந்திய சமுதாயம் மித்ராவை பற்றி கவலைப்பட தேவையில்லை.
காரணம் இந்திய சமுதாயத்திற்கு மித்ரா மட்டும் பிரச்சினை அல்ல.
மற்ற பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண வேண்டும் என்பது தான் அரசாங்கத்தின் முக்கிய இலக்காக உள்ளது.
இந்திய சமுதாயத்தின் கல்வி, தமிழ்ப்பள்ளி, பொருளாதாரம், வறுமை ஒழிப்பு என அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் இந்திய சமுதாயத்தை மீட்க வேண்டும் என்ற இலக்குடன் அரசு செயல்பட்டு வருகிறது.
ஆகவே அரசாங்கத்தின் இந்த முயற்சிகளுக்கு இந்திய சமூகம் முழு ஆதரவை வழங்க வேண்டும்.
டாக்டர் அம்பேத்கர் மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm