நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஜிஆரின் நான் ஆணையிட்டால் பாட்டை பாடியவர் இந்திய சமுதாயத்தை மறந்து விட்டார் என்ற குற்றச்சாட்டு உண்மையானதல்ல: பிரதமர் அன்வார் 

ஷாஆலம்:

எம்ஜிஆரின் நான் ஆனையிட்டால் பாட்டை பாடியவர் இந்திய சமுதாயத்தை மறந்து விட்டார் என்ற குற்றச்சாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்தார்.

பிரதமராக பொறுப்பேற்ற பின் நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கே காலம் ஓடிக் கொண்டிருக்கிறது.

அதே வேளையில் நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளது.

இதில் எந்த சமூகத்தையும் நான் ஓரங்கட்டவில்லை. 

குறிப்பாக நாட்டில் வசதிக் குறைந்த மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டங்களில் இந்திய சமூகமும் பயன் பெற்றுள்ளது.

மித்ராவின் வாயிலாக இந்திய சமுதாயம் பயனடையும் வகையில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தெக்குன், அமானா இக்தியார் வாயிலாக இந்திய சமுதாயத்திற்கு என கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப்பள்ளி, தமிழ்க் கல்வியின் மேம்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

இப்படி இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக அரசு பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

இருந்தாலும் இந்திய சமுதாயத்தை நான் மறந்து விட்டேன். 

எம்ஜிஆரின் நான் ஆணையிட்டால் பாடலை பாடியவர் இன்று இந்திய சமுதாயத்தை மறந்து விட்டார் என்றெல்லாம் என் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

இந்த குற்றச்சாட்டை நான் முற்றிலு மறுக்கிறேன். இதில் எந்த உண்மையும் இல்லை.

அனைத்து சமூகமும் எனக்கு முக்கியம் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset