
செய்திகள் இந்தியா
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட 5 வயது சிறுமி: கோவாவில் கொடூர சம்பவம்
கோவா:
கோவாவில் 5 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு கோவாவில் உள்ள வாஸ்கோவில் கட்டுமானத் தளத்தில் 5 வயது சிறுமி மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.
காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சிறுமி யார் என்று அடையாளம் காணப்படாத நிலையில், தெற்கு கோவா பகுதியின் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுமியின் உடலை பரிசோதித்த மருத்துவர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் அடிப்படையில் 20 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 7, 2025, 12:56 pm
புதிய சுங்கக் கட்டண திட்டத்தை கொண்டு வரும் ஒன்றிய அரசு
February 6, 2025, 9:51 pm
40 அடி கிணற்றில் விழுந்த கணவரை காப்பாற்றிய மனைவி
February 5, 2025, 10:47 pm
அலுவலகங்களில் மராத்தி கட்டாயம்: அரசு உத்தரவு
February 5, 2025, 10:17 pm
கேரள முஸ்லிம் லீக் தலைவர்களுடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு
February 5, 2025, 3:43 pm
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு கிலியைக் கிளப்பும் எச்-1பி, எல்-1 விசா விவகாரம்
February 5, 2025, 7:11 am
சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என்று கேட்ட சிறுவன்: அமைச்சர் ஏற்பு
February 5, 2025, 6:57 am