செய்திகள் இந்தியா
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட 5 வயது சிறுமி: கோவாவில் கொடூர சம்பவம்
கோவா:
கோவாவில் 5 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு கோவாவில் உள்ள வாஸ்கோவில் கட்டுமானத் தளத்தில் 5 வயது சிறுமி மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.
காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சிறுமி யார் என்று அடையாளம் காணப்படாத நிலையில், தெற்கு கோவா பகுதியின் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுமியின் உடலை பரிசோதித்த மருத்துவர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் அடிப்படையில் 20 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
நிபா வைரஸ் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தல்
June 9, 2026, 9:37 am
இந்திய அரசின் எஃகு ஆலையில் பயங்கர வெடிப்பு: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு
June 8, 2026, 1:31 pm
மத்திய பிரதேசத்தில் ரூ.80,000 ஊதியம் பெற்று வந்துள்ள 14 போலி மருத்துவர்கள்
June 4, 2026, 10:07 pm
