செய்திகள் மலேசியா
கோல குபு பாரு இடைத் தேர்தல் வேட்பாளர் இன்னும் விவாதத்தில் உள்ளது: கோபிந்த் சிங்
உலு சிலாங்கூர்:
கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கான நம்பிக்கை கூட்டணி விவகாரம் இன்னும் விவாதத்தில் உள்ளது.
ஜசெக தேசிய துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ இதனை தெரிவித்தார்.
சிலாங்கூர் ஜசெக தலைவரான கோபிந்த், தனது கட்சிக்கு பல ஆலோசனைகள் கிடைத்துள்ளது.
குறிப்பாக பல பெயர் பட்டியல் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
சிலாங்கூர் நம்பிக்கை கூட்டணியுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தப்படும். இதில் வேட்பாளர் தொடர்பான விவகாரங்கள் முடிவு செய்யப்படும்.
பின்னர் இந்த விவகாரம் ஐந்து தலைவர்களைக் கொண்ட குழுவைக் கொண்ட உயர்மட்டத்திற்கு கொண்டு வரப்படும்.
கோல குபு பாரு இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான முடிவை எதிர்காலத்தில் இறுதி செய்யப்படும்.
இறுதியில் வேட்புமனு தாக்கல் தேதிக்கு முன்பே இது அறிவிக்கப்படும்.
குருத்வாரா சாஹிப் கல்சா லேண்ட்டில் நடந்த வைசாகி தின பிரார்த்தனைக்கு பிறகு அவர் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm