செய்திகள் மலேசியா
கெடா போகோக் சேனாவிற்கு 2ஆம் நிலை வெப்ப அலை எச்சரிக்கை
அலோர்ஸ்டார்:
கெடாவில் உள்ள போகோக் சேனா மாவட்டத்திற்கு இரண்டாம் நிலை வெப்ப அலை எச்சரிக்கையை விடுக்கப்பட்டு உள்ளது.
வானிலை ஆய்வு மையம் மெட் மலேசியா இதனை அறிவித்தது.
இன்று மாலை 4.30 மணி நிலவரப்படி, அப் பகுதியில் ஆரஞ்சு அளவு வெப்ப அலை பதிவாகியுள்ளது.
ஆரஞ்சு நிலை எச்சரிக்கை என்பது குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலையான 37 முதல் 40 டிகிரி வரை இருக்கும்.
இதன் தாக்கம் கெடா மாநிலத்தை தவிர்த்து பினாங்கு, கிளந்தான், பேரா ஆகிய மாநிலங்களிலும் இருக்கும் என்று மெட் மலேசியா கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm