நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பண்டார் பாரு சாலை விபத்தில் தாயும் மகனும் மரணம் 

பண்டார்பாரு:

டொயட்டா அல்பார் வாகனம் லோரியுடன் மோதி விபத்துள்ளான சம்பவத்தில் தாயும் மகனும் மரணமடைந்தனர்.

இந்த சம்பவம் செர்டாங்கில் இருந்து பண்டார் பாருவை நோக்கி செல்லும் சாலையில் நிகழ்ந்தது.

55 வயது மகன், 85 தாய் உட்பட 5 பேர் சென்ற அல்பார்ட் வாகனம் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விசாரணையில், மரணமடைந்தவர் ஓட்டிச் சென்ற  கார், எதிர் பாதையில் நுழைந்தது.

இதனால் லோரியின் வலது பக்கம் மோதி விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்த சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் உடல் சவப்பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதே வேளையில் 43 வயது லோரி ஓட்டுநர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார் என்று பண்டார் பாரு போலீஸ் தலைவர் அஸ்மி மொக்தார் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset