நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிகேஆர் வங்கிக் கணக்கில் ரோயல்டி பணமா? ஃபஹ்மி ஃபட்சில் மறுப்பு 

கோலாலம்பூர்:

கிளந்தான் மற்றும் திரெங்கானுவிலிருந்து பில்லியன் கணக்கான ரோயல்டி பணம் பிகேஆர் கட்சியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் வெளியான தகவலை பிகேஆர் கட்சியின் தகவல் தொடர்பாளர் ஃபஹ்மி பட்சில் மறுத்துள்ளார்.

இது குறித்துக் காவல்துறை மற்றும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் புகார் மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். 

கட்சியின் வங்கி கணக்குச் சான்றளிக்கப்பட்ட தணிக்கையாளர்களால் தணிக்கை செய்யப்பட்ட பின்னர் பிகேஆர் கட்சியின் மாநாட்டில் அது குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்றும் என்பதையும் அவர் குறிப்பிட்டார். 

இது போன்ற அவதூறான பதிவுகளை வெளியிடும் தரப்பின் தவறான செயலாகும். 

பிகேஆர் வங்கிக் கணக்கில் இது போன்ற பெரிய தொகை செலுத்தபடவில்லை என்று அவர் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset