நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு மாநிலக் காவல்துறை தலைவராக ஹம்சா அஹம்மத் நியமிக்கப்படுவார்

ஜார்ஜ் டவுன்:

பினாங்கு மாநிலத்தின் புதிய காவல்துறை தலைவராக ஹம்சா அஹம்மத் நியமிக்கப்படவுள்ளார். 

தாற்போது மாநிலத்தின் காவல்துறை தலைவராக இருக்கும் காவ் கோக் சின்-க்குப் பதிலாக ஹம்சா அஹம்மத் மே 13-ஆம் தேதி நியமிக்கப்படுவார். 

ஹம்சா தற்போது புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறையின் துணை இயக்குநராகச் செயல்பட்டு வருகின்றார். 

கடந்த மாதம் காவ் கோக் சின் போதை பொருள் குற்றவியல் துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். 

தற்போது கூட்டரசுப் பண பரிமாற்ற பிரிவின் தலைவராக இருந்த ஹஸ்புல்லா அலி இடைக்கால காவல்துறை கமிஷ்னராக பதவி உயர்வு பெற்றுள்ளதையும் புக்கிட் அமான் தெரிவித்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset