நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பைசல், அக்யார் மீதான தாக்குதல்: துங்கு இஸ்மாயில் கண்டனம்  

ஜொகூர்பாரு:

ஹரிமாவ் மலாயா வீரர்களான பைசல் ஹலிம், அக்யார் ரஷித் ஆகியோர் மீதான தாக்குதலை ஜொகூர் சுல்தான் பட்டத்து இளவரசர் செயல்பட்ட துங்கு  இஸ்மாயில் கண்டித்துள்ளார்.

இந்த இரண்டு சம்பவங்களையும் மலேசிய போலீஸ்படை உடனடியாக விசாரிக்க வேண்டும்.

பொறுப்பற்ற நபர்களால் அவர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு சீர்குலைந்துள்ளது.

கால்பந்து வீரர்களான பைசல் ஹலிம், அக்யார் ரஷீத் சம்பந்தப்பட்ட சம்பவத்தை நான் கண்டிக்கிறேன்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளை போலீசார் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

முன்னதாக அக்யார் ரஷீத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அவரின் பணப்பை, கைத்தொலைபேசி ஆகியவை திருடப்பட்டது.

அதே வேளையில் பைசால் ஹலிம் மீது ஆசீட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset