செய்திகள் மலேசியா
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
பாத்தாங் காலி:
கோலகுபு பாருவில் உள்ள இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்.
இவ்வாரம் மே 11ஆம் தேதி நடைபெறும் கோலகுபு பாரு இடைத்தேர்தலில் தேசிய கூட்டணிக்கு வாக்களிக்க இந்தியர்கள் தயாராக உள்ளனர் என்று தேசிய கூட்டணியின் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடின் கூறினார்.
கோலகுபு பாருவில் ஒன்பதாவது நாள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் தேசிய கூட்டணி, தலைவர்கள் மேற்கொண்ட வாக்குசேகரிப்பில் இந்தியர்களின் வாக்குகள் பெரும்பாண்மையாக தேசிய கூட்டணிக்குப் போகும் சாத்தியம் அதிகம் உள்ளதாகவும் ஹம்சா சொன்னார்.
இந்தியர்கள் தற்போது தைரியம் கொண்டு அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். கடந்த காலங்களில் அவர்கள் யாவரும் அமைதியாக இருந்த வேளையில் தற்போது தைரியம் கொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் எதிர்வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தேசிய கூட்டணி சார்பாக கைருல் அனுவார் சவுத் போட்டியிடுகிறார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm
இந்திய சமூக திட்டங்களை கண்காணிக்க சிறப்பு குழு தேவையில்லை: டத்தோ ரமணன்
May 18, 2024, 1:57 pm
ஜொகூரில் ஜெமா இஸ்லாமியா அமைப்பில் 20 உறுப்பினர்கள்: ரஸாருடின் தகவல்
May 18, 2024, 1:34 pm