நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின் 

பாத்தாங் காலி: 

கோலகுபு பாருவில் உள்ள இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்.

இவ்வாரம் மே 11ஆம் தேதி நடைபெறும் கோலகுபு பாரு இடைத்தேர்தலில் தேசிய கூட்டணிக்கு வாக்களிக்க இந்தியர்கள் தயாராக உள்ளனர் என்று தேசிய கூட்டணியின் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடின் கூறினார். 

கோலகுபு பாருவில் ஒன்பதாவது நாள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் தேசிய கூட்டணி, தலைவர்கள் மேற்கொண்ட வாக்குசேகரிப்பில் இந்தியர்களின் வாக்குகள் பெரும்பாண்மையாக தேசிய கூட்டணிக்குப் போகும் சாத்தியம் அதிகம் உள்ளதாகவும் ஹம்சா சொன்னார். 

இந்தியர்கள் தற்போது தைரியம் கொண்டு அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். கடந்த காலங்களில் அவர்கள் யாவரும் அமைதியாக இருந்த வேளையில் தற்போது தைரியம் கொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். 

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் எதிர்வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தேசிய கூட்டணி சார்பாக கைருல் அனுவார் சவுத் போட்டியிடுகிறார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset