செய்திகள் மலேசியா
தேசிய முன்னணி வாக்காளர்கள் நம்பிக்கை கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பார்கள்: பிகேஆர் நம்பிக்கை
கோலாலம்பூர்:
ஒற்றுமை அரசாங்கத்தில் தேசிய முன்னணியும் நம்பிக்கை கூட்டணியும் ஒன்றாக செயலாற்றி வருகின்றனர். இதன் காரணமாக எதிர்வரும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் வெற்றிப்பெறும் சாத்தியம் உள்ளதாக பிகேஆர் கட்சியின் உதவி தலைவர் சாங் லிஹ் காங் கூறினார்.
இந்நிலையில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளரான PANG SOCK TAO ஐ தேசிய முன்னணி வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்து வெற்றிப்பெற செய்வார்கள் என்று அவர் தமது நம்பிக்கையைப் புலப்படுத்தினார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் இதுவரை அனைத்து கட்சிகளும் நன்முறையில் ஒத்துழைப்புடன் இருந்து வருகின்றனர். இதுவே சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவில் பிரதிபலிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
கோலகுபு பாரு சட்டம்மன்ற இடைத்தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. பிரதான நம்பிக்கை கூட்டணியும் தேசிய கூட்டணியும் முறையே போட்டியிடும் நிலையில் பி.ஆர்.எம். கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் போட்டியிடுகிறார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm
இந்திய சமூக திட்டங்களை கண்காணிக்க சிறப்பு குழு தேவையில்லை: டத்தோ ரமணன்
May 18, 2024, 1:57 pm
ஜொகூரில் ஜெமா இஸ்லாமியா அமைப்பில் 20 உறுப்பினர்கள்: ரஸாருடின் தகவல்
May 18, 2024, 1:34 pm