நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணி வாக்காளர்கள் நம்பிக்கை கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பார்கள்: பிகேஆர் நம்பிக்கை 

கோலாலம்பூர்: 

ஒற்றுமை அரசாங்கத்தில் தேசிய முன்னணியும் நம்பிக்கை கூட்டணியும் ஒன்றாக செயலாற்றி வருகின்றனர். இதன் காரணமாக எதிர்வரும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் வெற்றிப்பெறும் சாத்தியம் உள்ளதாக பிகேஆர் கட்சியின் உதவி தலைவர் சாங் லிஹ் காங் கூறினார். 

இந்நிலையில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளரான PANG SOCK TAO ஐ தேசிய முன்னணி வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்து வெற்றிப்பெற செய்வார்கள் என்று அவர் தமது நம்பிக்கையைப் புலப்படுத்தினார். 

ஒற்றுமை அரசாங்கத்தில் இதுவரை அனைத்து கட்சிகளும் நன்முறையில் ஒத்துழைப்புடன் இருந்து வருகின்றனர். இதுவே சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவில் பிரதிபலிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். 

கோலகுபு பாரு சட்டம்மன்ற இடைத்தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. பிரதான நம்பிக்கை கூட்டணியும் தேசிய கூட்டணியும் முறையே போட்டியிடும் நிலையில் பி.ஆர்.எம். கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் போட்டியிடுகிறார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset